சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளைய தேவன் அவர்களின் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் அன்னாரது 255 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று 31.5.24 மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் அவர்கள்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன் பாண்டியன் அவர்கள் மற்றும் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment