நாசரேத் தூய யோவான் பேராலய 96-வது பிரதிஷ்டை அசன விழா!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
நாசரேத் தூய யோவான் பேராலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நடைபெ ற்ற அசன விழாவில் ஆயிரக்கணக் கானோர் பங்குகொண்டு அசன விருந்தினை வாங்கிச் சென்றனர்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத் தின் தலைமை தேவாலயமான (கதீட்ரல்) நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் 96 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா கடந்த 5 ஆம்தேதி துவங்கி 7 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் மாலை ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் பஜனை பிரசங்கம் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண் டம் சேகர தலைவரும் ,குருவானவ ருமான வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.
2-வது நாள் மாலை ஐ.எம்.எஸ். இந்திய மிஷனெரி சங்க கலை நிக ழ்ச்சிகள் நடைபெற்றது.
3- வதுநாள் மாலை நெல்லை வாழ் நாசரேத் வட்டார மக்கள் ஐக்கியம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
4-வது நாள் மாலை சென்னை வாழ்நாசரேத்மக்கள்சங்கம்சார்பில் சின்னச் சின்ன வெளிச்சம் புகழ் அருள்பிரகாசம் குழுவினரின் மிஷ னரிகள் பணியால் இந்த மண்ணில் நிகழ்ந்தது சமய புரட்சியே! சமுதாய புரட்சியே! என்ற பட்டி மன்றம் நடை பெற்றது.
5 வது நாள் மாலை நாசரேத் சொர்க்கவாசல்ஜெபக்குழு சார்பில் இந்திய மிஷனெரி சாது சுந்தர்சிங் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சியை சித்தரிக்கும் சாது என்ற ஒலி, ஒளி நாடகம் நடைபெற்றது .
6 வது நாள் பேராலயத்தில் குடும்ப உபவாச கூடுகை நிகழ்ச்சி பசுமலை தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் தலைமையில் நடை பெற்றது.மாலையில் பேராலய வாலிபர்ஐக்கியசங்கத்தின்சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெ ற்றது.மாலை ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழிப்பாராதனை நடை பெற்றது. ஆராதனையில் பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடி னர்.இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல முன்னாள் உப தலை வர் லூர்துராஜ் ஜெயசிங் சிறப்பு செய்தி கொடுத்தார்.
7 வதுநாள் அதிகாலை பிரதிஷ்டை- அசனப் பண்டிகையை முன்னிட்டு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.மாலையில் அசன வைபவம் நடைபெற்றது. தூய யோவான் பேராலய திருப்பணிவி டையாளர்கள் பொன் செல்வின் அசோக்குமார் முன்னிலையில் ஹென்றிஜீவானந்தம்பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை க்குரு ஹென்றி ஜீவானந்தம் தலை மையில் உதவிகுரு பொன் செல் வின் அசோக்குமார், அசன கமிட்டி தலைவர் செல்வின் ஜெபக்குமார், உபதலைவர் மர்காஷிஸ்தேவதாஸ், செயலாளர் ஆனந்தராஜ், இணைச் செயலாளர் இளவரசன், பொருளா ளர் லேவி அசோக் சுந்தரராஜ், சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமு வேல் மற்றும் அசன கமிட்டி உறுப் பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள்,சபை மக்கள் செய்திருந்தனர்.
நாசரேத் நிகசன், செய்தியாளர்.

No comments:
Post a Comment