தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் உடனடியாக கைது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 13 May 2024

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் உடனடியாக கைது


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் உடனடியாக கைது - பறித்துச் செல்லப்பட்ட ரூபாய் 20,000/-  மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் ரூபாய் 4,310/- பறிமுதல்.


தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் அப்துல் ரஹீம் (21) என்பவர்  (10.05.2024) அன்று இரவு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் மேற்படி அப்துல்ரஹீமை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர்  திரு. முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான சங்கர் மகன் செல்வகுமார் (எ) யானை செல்வம் (27) மற்றும் தமிழ்மணி மகன் ஆனந்த்பாபு (24) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி அப்துல் ரஹீமிடம் செல்போன் மற்றும் வெள்ளி கொடியை பறித்து சென்றது தெரியவந்தது.


உடனே தனிப்படை போலீசார் மேற்படி எதிரிகளான செல்வகுமார் (எ) யானை செல்வம் மற்றும் ஆனந்த்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்பிலான செல்போன் மற்றும் ரூபாய் 4,310/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad