நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருபெரும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 April 2024

நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருபெரும் விழா

 


நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருபெரும் விழா

  
நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருபெரும் விழா நடந்தது . 
நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விளையாட்டு விழா, ஆண்டு விழா என இருபெரும் விழா நடந்தது.
தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார்.நிறுவன தாளாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி வரவேற்றார்.ஓய்வு பெற்ற ஆசிரியை  வயலெட்  எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினார்.மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.இதையடுத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் பிரைட்டி செல்வகுமாரி நடத்தினார். நிகழ்ச்சியை விரிவுரை யாளர் ஞானமலர் தொகுத்து வழங்கினார் ‌. 
இதில் குருவானவர்  எலிசபெத், தூய யோவான் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் வயோலா மார்கெட் , தலைமை ஆசிரியை ஜுலியற் ஜெயசீலி , தூய யோவான் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா,  ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெமிமா ராஜசேகர்  மற்றும் விரிவுரையாளர்கள், அலுவலர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad