ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் 2024 -2025 வரி வசூல் துவங்கியது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 April 2024

ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் 2024 -2025 வரி வசூல் துவங்கியது.


ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் 2024 -2025 வரி வசூல் துவங்கியது.


உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டு தோறும் சொத்துக்கள் வரி. குடிநீர் வரி, தொழில் வரி, மற்றும் உரிமங்கள் ஆகியவற்றிற்கு ஏப்ரல் மாதம் கேட்பு தயாரிப்பு பணி நடைபெறும். அதேபோல் ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் இந்த ஆண்டும் கேட்பு தயாரிக்கப்பட்டு வரி வசூல் துவங்கியது. ஆண்டுதோறும் வீட்டு வரி. குடிநீர் வரி முதலில் செலுத்தி வரும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி 24-25 ஆண்டிற்கு வரியை செலுத்தினார். அந்த ரசீதினை செயல் அதிகாரி  காயத்ரி ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி யிடம் வழங்கினார். அலுவலக தலைமை எழுத்தர் கிளாமர், வரிவசூலிப்பாளர்கள் எட்வர்ட், சாந்தா, தட்டெழுத்தர்கள் சொர்ண லட்சுமி, திவ்யா அலுவலக உதவியாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad