பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட முயற்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 April 2024

பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட முயற்சி

 


குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வடக்குகரை விளை கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலுக்கண்ணு. இவருடைய மனைவி கமலாட்சி (62). இவர் கணபதிபுரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேர்க்கிளம்பியில் இருந்து ஆற்றூர் செல்லும் பஸ்சில் ஏறினார். இந்த பஸ்சின் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.


அதில் 3 பெண்கள் கமலாட்சியின் அருகில் நின்றபடி இருந்தனர். வீயன்னூர் அருகே பஸ் சென்ற போது அவர்கள் நைசாக கமலாட்சியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியின் கொக்கியை கழற்ற முயன்றனர். இதனை உணர்ந்த அவர் சுதாரித்துக் கொண்டு கையை தட்டி விட்டு சத்தம் போட்டார். உடனே வீயன்னூர் சந்திப்பில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அந்த சமயத்தில் 3 பெண்களும் பஸ்சில் இருந்து அவசர, அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.


தொடர்ந்து 3 பெண்களையும் பயணிகளும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விரட்டி சென்று பிடித்து நைய புடைத்தனர். பின்னர் அவர்களை திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad