மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு 8 மணிக்கு கன்னியான்ஆட்டம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, இரவு 7 மணிக்கு கனியான் ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாரதனை நடைபெற உள்ளது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு படைப்பு ஆராதனை, அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவையொட்டி திங்கட்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமலிங்க குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
.jpg)
No comments:
Post a Comment