நர்சிங் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 21 April 2024

நர்சிங் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா.

திருமறையூரில் இயங்கி வரும் புனித லூக்கா நர்சிங் கல்லூரியில் இன்று மாலை முப்பெரும் விழா நடைபெற்றது. நர்சிங் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட தாழ்வார கட்டிடங்களையும், மாணவியருக்கான புதிய விடுதி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வையும், சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன் புதிய வாகன நிறுத்துமிடம் கட்டிடத்தை திருமண்டல மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் திறந்து வைத்தார். 


இந்நிகழ்ச்சிகளில் திருமண்டல உபதலைவர் அருட்திரு. தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் அருட்திரு.இமானுவேல் வான்ஸ்டக், திருமறையூர் சேகர குருவானவர் அருட்திரு.ஜான் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரி தாளாளர் மருத்துவர்.கமலி ஜெயசீலன் வரவேற்று பேசினார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே ஜெயசீலன் அறிமுக உரையாற்றினார், கல்லூரி முதல்வர் பேராசிரியை சோபியா செல்வராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad