எழுவரைமுக்கி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூர் ஆர்சி தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது, இம்முகாமில் ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவ அலுவலர் மெரின் வசந்த ரூபா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.
ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளர் ஜெயபால், கிராம சுகாதார செவிலியர் ஜோதிமணி,அங்கன்வாடி பணியாளர் பவுலின் வின் சேந்தி,அங்கன்வாடி உதவியாளர் பஞ்சவர்ணம், மக்களை தேடி மருத்துவம் தனஜா மற்றும் ஆர் சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் கலந்து கொண்டனர். இம்முகாமில் 43 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment