தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவி மசுமிதா வெற்றி பெற்றுள்ளார். சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு எழுதிய 8ஆம் வகுப்பு மாணவி மதுமிதா வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு ஒன்றிய அரசு சார்பில் 9முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
வெற்றி பெற்ற மாணவியையும், பயிற்சியளித்த ஆசிரியர்களை பள்ளித் தலைவர் அற்புதராஜ், செயலாளர் குமரகுருபரன், துணை செயலாளர் மகேஸ்வரன், துணைத் தலைவர் சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவி, மாணவிகள் பாராட்டினர்.
- நிக்சன் செய்தியாளர் நாசரேத்

No comments:
Post a Comment