தென்திருப்பேரையில் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 July 2023

தென்திருப்பேரையில் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், தென்திருப்பேரை பேரூராட்சி மேலரத வீதியில் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இன்று அடிக்கல் நாட்டி துவக்கி  வைத்தார். பின்பு அவர் பேசுகையில் இன்று தொடங்கப்படும் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்படும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 5 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப் படவுள்ளது. 


24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவதற்காக தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது  தென்திருப்பேரை பேரூராட்சி தான். இத் திட்டத்தினை செயல்படுத்த 8 கோடி ரூபாய் தென்திருப்பேரை பேரூராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தென்திருப்பேரை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த், துணைத்தலைவர் து.அமிர்தவள்ளி, செயல் அலுவலர் த.ரமேஷ்பாபு, ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad