குமாரபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் வருஷாபிஷேகம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 June 2023

குமாரபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் வருஷாபிஷேகம்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக  விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஹோமம் மற்றும் பூஜை உடன்   தொடங்கப்பட்டது.


காலை 7:00 மணிக்கு விமான அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்பு காலை 8 மணிக்கு மேல் ஸ்ரீ முத்தாரம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தல் நிகழ்ச்சி மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் நடைபெற்றது.

இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை குமாரபுரம் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad