செய்துங்கநல்லூர், சேவியர் பாலிடெக்னிக்கில் உலக யோகா தினம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 22 June 2023

செய்துங்கநல்லூர், சேவியர் பாலிடெக்னிக்கில் உலக யோகா தினம்.

photo_2023-06-22_14-27-29

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சியை தென்திருபேரை ஹெஜோ நேச்சுரல் ஹெல்த் கிளினிக்  மருத்துவர்கள் லயன் டாக்டர் ஆரோக்கியபழம், டாக்டர் அனி சினேகா முடநீக்கியல் நிபுணர் ரோஸ் லில்லி நேசகுமாரி ஆகியோர் மாணவர்களுக்கு ஆசனங்கள், பிராணாயாமம், முத்திரைகள், பந்தரா போன்றவற்றை செய்து காட்டி பயிற்சி அளித்தனர். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வரவேற்று யோகா குறித்த விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

முடிவில் முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாமாண்டு துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் முதலாம் ஆண்டு ஆசிரியர் லயன்  சரவணன், முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

photo_2023-06-22_14-27-19

அதே போல் நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சர்வ தேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கென்னடி தேவராஜ் தலைமை தாங்கினார்.


உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் வினோத் மாணவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளித்தார். நிறைவில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. என்.சி.சி. ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் தலைமையில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad