தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 02.06.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி ((Negotiable Instrument Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் சனிக்கிழமை 10.06.2023 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மரு. செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment