தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஏரல் புதிய பேருந்து நிலையம் அருகே காவல் ஆய்வாளர் மேரீ ஜீவிதா உதவியாளர் இமானுவேல் சேகர் தனிப்பிரிவு ஏட்டு சரவணகுமார் மற்றும் காவலர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்துவது தெரிய வந்தது, இது தொடர்பாக கருங்குளம் இசக்கி மகன் பரமசிவன் அவரது மனைவி சுந்தரம் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் தெருவை சேர்ந்த அபிமன்யு மகன் தங்கை இசக்கி ஆகியோர் சட்டவிரோதமாக மதுபாட்டில் கடத்துவது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து ஏரல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment