தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் முனைவர் P.கோபால் இலவச கண் பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தார். தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் S.அழகுலிங்கம்,S. தமிழ் செல்வி, S.உமா மகேஷ்வரி ஆகியோர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் கண் பரிசோதனை செய்வதற்காக வருகைப் புரிந்தனர். 200 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை நவீன இயந்திரங்கள் மூலமாக கண்டறிந்து அதற்கான தீர்வுகளும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. குறைபாடு உடைய மாணவ மாணவிகளுக்கு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கண் கண்ணாடி பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் அகர்வால் கண் மருத்துவமனையில் இலவசமாக கூடுதல் பரிசோதனை மேற்கொள்ள இலவச மருத்துவ சீட்டும் வழங்கப்பட்டது. இப்பரிசோதனை முகாம் மாணவ,மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இம்முகாம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் செல்வி செ.எப்சிபா,அனைத்து பேராசிரியர்கள் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்கள்.
மகிழ்ச்சி.
ReplyDeleteகல்லூரிநிருவாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் எனது பாராட்டு.