முள்ளக்காடு ஸ்பிக் நகர் பகுதியில் திமுக மாநில மகளிரணி பிரச்சார குழுவினரால் மகளிரணிக்கான நேர்காணல் நடைபெற்றது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 9 February 2023

முள்ளக்காடு ஸ்பிக் நகர் பகுதியில் திமுக மாநில மகளிரணி பிரச்சார குழுவினரால் மகளிரணிக்கான நேர்காணல் நடைபெற்றது

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட ஸ்பிக் நகர் பகுதி திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் தேர்வு குறித்த நேர்காணல் ஸ்பிக் நகர் பகுதி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளர் ஜெ.சி.பொன்ராணி தலைமையில், பகுதிச் செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான ஆஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது. நேர்காணலில் மகளிரணி பொறுப்புக்கு விண்ணப்பித்த
நபர்களிடம் கட்சிக்காக ஆற்றியப் பணிகள், கட்சி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்றது போன்ற பல விபரங்களை மகளிரணி பிரச்சார குழுவினர் கேட்டறிந்தனர்.
இதில் ஸ்பிக் நகர் பகுதி மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணியினர், அவைத்தலைவர் செல்லப்பாண்டி பொருளாளர் ரகு மற்றும் வட்ட செயலாளர்கள் கருப்பசாமி, சுப்பிரமணியன், வசந்தி, மைக்கேல்ராஜ் மற்றும் பகுதி நிர்வாகிகள் அந்தோணிராஜ், ஆதி ஆனந்த், செல்வகுமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஆனந்த் மாவட்ட மகளிர் தொண்டரணி கல்பனா, ஸ்பிக் நகர் பகுதி மகளிர் தொண்டர் அணி சித்திரை புஷ்பம், அஜிதா, வளர்மதி,  மகளிர் அணி மாலா ஸ்ரீ உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad