தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்
யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்
வட்டார மருத்துவ அலுவலர் மரு.தங்கமணி,வட்டார வளர்ச்சி அலுவலர்,பாண்டியராஜன்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம்,ஒட்டநத்தம் சுகாதார ஆய்வாளர் காளிமுத்து,
ஊராட்சி மன்ற தலைவர்கள்,
செயலர்கள்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment