நாசரேத்தில் சிலம்பம் விளையாட்டுடன் பொங்கல் கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 16 January 2023

நாசரேத்தில் சிலம்பம் விளையாட்டுடன் பொங்கல் கொண்டாட்டம்.

தூத்துக்குடி ஏரல் தாலுகா நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக  பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  கராத்தே மற்றும் சிலம்பு  மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து, புது பானையில் பொங்கலிட்டனர் .தொடர்ந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.விழாவிற்கு அ.இ.அதிமுக 5 வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad