தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தற்காப்பு கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 December 2022

தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தற்காப்பு கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார்

ராஜபாளையம் திரு இருதய மெட்ரிகுலேசன் பள்ளியில் கராத்தே, ஜூடோ, சிலம்பம், மல்யுத்தம் போட்டிகள்  நடைபெற்றன.  இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோப்பை, கேடயம், மெடல், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை, 
தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து தற்காப்பு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை அம்பாசங்கர் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் அருட்.சகோதரி மரியநேசம், பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி சாராள் ரோஸ், மாவட்ட பிரதிநிதி நெல்சன், கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுதர்ஸன்,
ஆம்ஸ்ட் ராங்,பள்ளி உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad