ஸ்பிக் நிறுவனம் முதலாவதாக" ஒரு நாடு ஒரு உரம்" என்ற அடிப்படையில் பாரத் யூரியா உர வினியோகத்தை தொடங்கியது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 December 2022

ஸ்பிக் நிறுவனம் முதலாவதாக" ஒரு நாடு ஒரு உரம்" என்ற அடிப்படையில் பாரத் யூரியா உர வினியோகத்தை தொடங்கியது

ஒரு நாடு ஒரு உரம் என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பிக் நிறுவனம் தனது ஸ்பிக் யூரியா என்பதை பாரத் யூரியா என தமிழ்நாட்டில் தமது உற்பத்தியின் வாயிலாக இந்தியா முழுவதும் வினியோகம் செய்கிறது. அதனை ஒட்டிய தொடக்கவிழா  தூத்துக்குடி ஸ்பிக் ஆலையில் டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் இதனை பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்பிக் நிறுவனம் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு 
இந்திய விவசாயிகளின் விவசாயத்தை பெருக்குவதற்கு தேவையான அறிவியல் பூர்வமான மற்றும் இயற்கைக்கு உறுதுணை புரியும் தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனம்,முதல் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் உரத்தயாரிப்பில் கவனம் செலுத்தி இந்திய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றது. ஒரு நாடு, ஒரு உரம் கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவான ஸ்பிக்நிறுவனம் அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரிகிறது.
பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் ஆண்டிற்கு 6 லட்சத்து 20 ஆயிரம் டன் உற்பத்தி செய்துவரும் நிலையில். வரும் நாட்களில் ஆண்டிற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் உரம் தமிழகத்தில் விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட  5 மாவட்டத்திற்கு 2100 டன் உர விநியோகத்தை தொடங்கியுள்ளது" என்றார். நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் கண்ணன், முதன்மை செயல் அதிகாரி பாலு, பொதுமேலாளர் (பணிகள்) செந்தில் நாயகம், விற்பனை அதிகாரிகள் அடைக்கலம், பாஸ்கர், நிர்வாக மேலாளர் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு மேலாளர் அம்ரிதகௌரி, அலுவலர் குணசேகரன் உட்பட ஸ்பிக் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad