மாப்பிள்ளையூரணி பகுதிகளில் குப்பை அகற்றுதல் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 December 2022

மாப்பிள்ளையூரணி பகுதிகளில் குப்பை அகற்றுதல் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அவசரக் கூட்டம் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் தினமும் சேரும் குப்பைகளை அகற்ற கூடுதல் டிராக்டர் நடை மற்றும் அதற்கான வாடகையை உயர்த்தித்தர மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோருவது குறித்து
ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் 15 உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர்.
இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராட்சியாக திகழ்ந்து வருகின்றது. இந் நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களின் தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கு தினசரி மூன்று டிராக்ட்டர் வாகனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 1 டிராக்ட்டருக்கு 4 நடை என 12 நடைகளும், ஒரு நடைக்கு கூலி, டீசல், டிராக்ட்டர்  வாடகை உட்பட ரூ.800/- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சிறப்பான ஆட்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளுடன், அரசின் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி ஊராட்சியின் குக்கிராமங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில்; தற்போது டீசல் விலை உயர்வு, வண்டி வாடகை உயர்வு, கூலி உயர்வால் இப் பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்ப்பட்டு வருகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்சுச்சூழல் கேடு உள்ளிட்ட பிரச்சணைகள் ஏற்ப்படாமல் தடுக்கவும், கிராமங்களை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கவும் 1 நாளைக்கு 12 நடை குப்பை அள்ளும் பணியை காலத்தின் சூழ்நிலைக் கருதி ஒரு நாளைக்கு குப்பை அள்ளும் டிராக்டர் நடையை 20 நடையாக உயர்த்தியும், ஒரு நடைக்கு கூலி, டீசல், டிராக்ட்டர் வாடகையை ரூ.1200/- ஆக பொதுமக்கள் நலன் கருதி உயர்த்தி தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெறுவது என இந்த அவசர கூட்டத்தில் 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத் பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், அருண் மிக்கேல் ஸ்டாலின், உமா மகேஸ்வரி, தங்க மாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ் உள்ளிட்வர்களும், பார்வையாளர்கள் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad