இந்த விபத்தில் ஹ்ரித்திக் மற்றும் அவரது நண்பர்களான வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), நாலாட்டின்புதூர் மேல தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் குமார் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரி கண்ணன் மற்றும் தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூவரின் உடல்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயம் அடைந்த 2பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment