தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் TNDTA நடுநிலைப் பள்ளி குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 'கழுதை புத்தக வாசிப்பு இயக்கம் ' மூலம் வாசிப்புத் திருவிழா நடத்தப்பட்டது. ஆகம் கலைக் குழுவினர் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் MIME நிகழ்த்தினர்.
சாக்பீஸ் NGO உறுப்பினர் ரம்யா மூலம் சிறார்களுக்கான ஆர்வமூட்டும் கதைகள் கூறப்பட்டது. சென்னையைச் சார்ந்த மென்பொருள் பொறியாளர் திரு. விழியன் அவர்கள் எழுதிய சிறார் புத்தகங்கள், மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வண்ணம் அன்னார் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment