தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் மாவட்ட ஆவின் பால் தலைமை அலுவலகத்தில், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு
மாவட்ட ஆவின் துணைப் பதிவாளர் நவராஜ் முன்னிலை வகித்தார், உதவி பொது மேலாளர்.ஸ்ரீரெங்கநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு பரிசுகளை வழங்கிய சேர்மன் சுரேஷ்குமார் "தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 30 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகி வருகிறது. அதை 50,000 லிட்டராக ஆக உயர்த்திட பால் உற்பத்தியாளர்கள் முயற்சிக்கும் வகையில் அதற்கான வழிமுறை இலக்கை எட்டிட நாம் பாடுபட வேண்டும். மேலும் பால் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் முதல்வர் ஆணைப்படி பால் கறவை மாடுகளுக்கு 33 சதவீதம் தாட்கோ அலுவலகம் மூலம் கடன் தருகின்றனர்.அதையும் பயனாளிகள் பெற்று பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும்" என்று பேசினார்.
No comments:
Post a Comment