பசுமை நாயகன் நடிகர் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வழிகாட்டுதல்படி பசுமையான சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஏராளமான மரங்களை வளர்த்த நடிகர் விவேக்கின் 61- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தெப்பக்குளப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அ.தி.மு.க.மாவட்ட பிரதிநிதி R.M.K.S. சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் செந்தூர் பசுமை இயக்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment