தூத்துக்குடி மாவட்ட
டீ.சவேரியார்புரத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசை பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் உருவான நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் ஆர். சரவணகுமார் முன்னிலை வகித்தார்.3வது வார்டு உறுப்பினர் பி. பாரதிராஜா, இசைப்பள்ளியின் தலைமையாசிரியை சிவகாம செல்வி, பள்ளியின் பிற துறை ஆசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
No comments:
Post a Comment