மாவட்டம் உருவான 36 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மேயர், ஆணையர் மரம் நட்டனர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 23 October 2022

மாவட்டம் உருவான 36 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மேயர், ஆணையர் மரம் நட்டனர்


 1986ம் ஆண்டு  தூத்துக்குடி மாவட்டம் உருவான தினத்தை முன்னிட்டு 36 வது ஆண்டு கொண்டாட்டம் அக்டோபர் 20 அன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான புல் தோட்டம் நுண் உர கிடங்கு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஶ்ரீ ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, அவைத் தலைவர் செல்வராஜ்,    மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சரவணன், பரின்ஸ், துணை ஆணையர் தனசிங், நகர்நல அலுவலர் அருன்குமார், சுகாதார அலுவலர்கள் ஹரி கணேசன், ஸ்டாலின், ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயர் உதவியாளர் ரமேஷ், பிரபாகர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad