தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முடிவைத்தானேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ரம்யா, துணைத்தலைவர் வீரமாகாளி, கவுன்சிலர்செல்ல பார்வதி, உள்ளூர் திமுக முக்கிய பிரமுகர் ராமசாமி,பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டிபா எக்ஸிபா,உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார், ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன்,மரிய அண்டனி ஜெரால்டு, ஆசிரியைகள் மகஜா,முத்து கனி,முத்து குமாரி,மாரீஸ்வரி,புனிதா,பியுடா சாந்தி என பலரும் கலந்து கொண்டனர். மொத்தம் 65 மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.நிகழ்வில் பேசிய திமுக பிரமுகர் ராமசாமி, " முதல்வரின் நேரடி அணுகுமுறை கல்வியில் மாணவ மாணவியர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே இன்றைய மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன. இதனை பெற்றுக் கொள்ளும் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதுடன் நன்கு படிப்பதற்கும் முயற்சி செய்து வெற்றி பெறவும் வாழ்த்துவதாக கூறினார்.அவரைத் தொடர்ந்து பேசிய பிரமுகர்கள் அனைவருமே மாணவர்கள் நேரத்திற்கு பள்ளி பெறுதல் பற்றியும் பாதுகாப்புடன் சைக்கிளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர்.முனைவர். சரவணகுமார் நன்றியுரை கூற இனிதே நிறைவுற்றது.
Post Top Ad
Monday, 12 September 2022
முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
Tags
# ஓட்டப்பிடாரம்
About Tamilagakural Thoothukudi
ஓட்டப்பிடாரம்
Tags
ஓட்டப்பிடாரம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment