தூத்துக்குடியில் 26ம் தேதி மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 September 2022

தூத்துக்குடியில் 26ம் தேதி மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவுதினத்தை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அவரது 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு 26.09.2022 அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம்  வட்டங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள்  மற்றும் மதுபானக் கடையுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad