எம். எல். ஏ. தலைமையில் கீழ ஈராலில் மரம் வளர்ப்போம் வாரீர் ஓர் நாள் கருத்தரங்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 17 August 2022

எம். எல். ஏ. தலைமையில் கீழ ஈராலில் மரம் வளர்ப்போம் வாரீர் ஓர் நாள் கருத்தரங்கம்.

தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட,கீழஈரால் கிராமத்திலுள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம்* இணைந்து நடத்திய மரம் வளர்ப்போம் வாரீர் ஓர் நாள் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவ- மாணவியருடன் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.மேலும் கல்லூரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு  பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை ஆகிய வற்றை வழங்கினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் விக்டர் அந்தோணிராஜ்,கல்லூரியின் முதல்வர்
ஜோசப்சார்லஸ், ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகள்,மரங்கள் மக்கள் இயக்கத்தினர்,கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் இறுதியில்  மரக்கன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad