புதுக்கோட்டையில் நாடார் சங்க புதிய கட்டட திறப்பு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 July 2022

புதுக்கோட்டையில் நாடார் சங்க புதிய கட்டட திறப்பு விழா

 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை நாடார் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இவ்விழாவில் புதுக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகிகள் என்.கருப்பசாமி,எஸ்.பத்திரகாளி முத்து, ஏ.அத்திப்பழம்,ஏ.முருகேசன்,பி அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமை ஏற்று வழி நடத்தினர்.நிகழ்வில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கனவே இடம் வழங்கி இருந்த மறைந்த எஸ்.ஆசீர்வாதத்தின் மகன் ஏ.இஸ்ரவேல் கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்
விழாவில் புதுக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ஐ.ஜாக்சன் துரை மணி,பேரூரணி பஞ்சாயத்து தலைவர்என்.சித்திரைச்செல்வன், மத்திய ஒன்றிய வர்த்தக அமைப்பாளர் ஆர். பொன் செல்வன் தொடக்கக் கல்வி அலுவலர் எம். ஜெயபாலன்,தலைமை ஆசிரியர் டி.ஜவஹர்,சமத்துவ மக்கள் கழகத்தை சேர்ந்த பி.அருள்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை நாடார் இளைஞர் அணியைச் சேர்ந்த ஏ.ரத்தினகுமார், பி.பிரதீப் ராஜ், எம். கருப்பசாமி,பி.கிருஷ்ணன் ஆகியோர் வெகு விமர்சியாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad