மூலிகை செடிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 June 2022

மூலிகை செடிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி

தூத்துக்குடி வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு தூத்துக்குடி வாகைகுளத்திலுள்ள 
ஸ்கேட் வேளாண்மை அறிவியல் மையத்தில்  அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம் வன அலுவலர் அருண்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பயிற்சின் தொடக்க உரையினை உதவி வேளாண்மை இயக்குனர் சந்திரகலா வழங்கினார்.விவசாயிகளிடம் மூலிகை செடிகளின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு பற்றி வேளாண் இணை அலுவலர் ஆனந்தன் எடுத்து கூறினார். இதில் ஸ்கேட்ன் மூத்த வேளாண் அறிவியல் விஞ்ஞானி மாசன செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சியி ல் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப அலுவலர் ஜெபகுமார், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயலட்சுமி நன்றி உரை கூற பயிற்சி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad