தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்
வ. உ. சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது அடக்குமுறையை ஏவிய பிரிட்டிஷ் அரசின் கலெக்டர் ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் சுட்டுகொன்று காவலர்கள் கையில் சிக்கிமடியகூடாது என தன்னைதானே சுட்டுகொண்டு வீரமரணம் அடைந்த தியாகி வீரவாஞ்சிநாதன் உயிர்தியாகம்செய்த 111 வது நினைவுதினத்தை முன்னிட்டு வாஞ்சி மணியாட்சி ரயில்நிலையத்தில் அந்தணர் முன்னேற்ற கழகம் நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் தலைமையில் மாலைஅணிவித்து மரியாதை செய்யபட்டது.
நிகழ்வில் மாநில நிர்வாகிகள் நிவர்த்தி பாலு. இளைஞரணி முத்துசிவம் மாவட்ட தலைவர் திருநெல்வேலி முத்துராமன்,சுரேஷ்,சங்கர் தூத்துகுடி கணபதி கன்னியாகுமரி மஹாராஜன் தென்காசி சிவா. கோவில்பட்டி நாராயணன் தூத்துகுடி இளைஞரணி வைப்பார் கார்த்திக் அம்பி கண்ணண் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நினைவுஅஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பத்திரிக்கையாளரை சந்தித்த தலைவர் ராஜாளி ஜெயபிரகாஷ் பேசுகையில்
தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வீரவாஞ்சிநாதன் பெயரைசூட்ட மத்தியஅரசுக்கு கோரிக்கையும்,
வாஞ்சி மணியாட்சி ரயில்நிலைய முகப்பில் வீரவாஞ்சிநாதனுக்கு முழுஉருவ வெண்கலசிலை அரசு நிறுவவேண்டும் என இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்னவைக்கபட்டது.
No comments:
Post a Comment