தமிழகத்தில் கொரோனா நோயை முற்றிலுமாக ஒழித்திடும் நோக்கில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் அரசின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியிலுள்ள
சூளைவாய்க்கால் பகுதியிலுள்ள ஹமிதியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு, சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.இதில் ஊரின் மக்கள் முன்னவந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமில் காங்கிரஸ் மாவட்ட ஓபிசி தலைவர் தாஸன்,கிராம சுகாதார செவிலியர் பொன்னுத்தாய், உதவியாளர் சரஸ்வதி, மஸ்தூர் லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment