தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு உள்ள வல்லநாடு வெள்ளையத்தேவன் மணி மண்டபம் மற்றும் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பசும்பொன் தேவர் கழக மாநில பொருளாளரும் மராட்டிய தேசிய பேரவை பொதுச்செயலாளருமான
ச. அங்கப்பன் பேசுகையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான வீரரான வெள்ளையத்தேவன் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி செவ்வனே சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதற்காக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறினார்.நிகழ்வில் மாநில துணை தலைவர் எம்.பாலு,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே. மாரிமுத்து, நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ. மகாராஜன் இசக்கி,மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment