ஒரு மாவட்டமானது பசுமை சூழ்ந்து இருப்பது அவசியமாகும். அப்போதுதான் மழை பொழிவு அதிகரிக்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது நமது மாவட்டத்தில் அதிக அளவு மரம் நடவேண்டும் அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில் தாமிரபரணி ஆறு பொதிகை தொடங்கி தூத்துக்குடியில் நிறைவு பெறுகிறது. அப்படி பார்க்கும் பொழுது தாமிரபரணி ஆற்று நாகரிகமானது தூத்துக்குடியில் தான் காணப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு நடைபெறும் அகழ்வா ராச்சிகளும் அதனுடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகளும் நிரூபணம் செய்கின்றன என்றார்.
தமிழ் மொழியானது பல ஆண்டுகள் கடந்தும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அசோகர் காலத்தில் எழுதியும் பேசியும் வந்த பிராகிர்த மொழி கூட மாற்றம் பெற்றபோதிலும் மாறாத பெருமையுடன் இன்றும் வாழும் தமிழ் மொழி சிறப்பாக உள்ளது. அதனை பேசி வாழும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நாகரிகத்திற்கு தொட்டிலாக விளங்கும் பெருமை கொண்ட தாமிரபரணியை பாதுக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார். நிகழ்வில் மரம் நடுவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்லா காதர், எழுத்தாளர் முத்தா லாங்குறிச்சி காமராசு ஆகியோர் விழாவில் நிழல் தரும் மரங்களை நட்டனர்.
நிறைவில் மரக்கன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது, விழாவில் ஜமாத் செயலாளர் அப்துல் கனி, பொறியாளர் ஜேசுராஜ், மண்டல அலுவலர் லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment