நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கடந்த 6 வருடங்களாக தலைமைறைவாக இருந்த 4 குற்றவாளிகளை மும்பை சென்று கைது செய்த கோவில்பட்டி மேற்கு குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் பத்மாவதி, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் உலகநாதன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் பாரதிகண்ணன் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய பெண் காவலர் முத்துலெட்சுமி ஆகியோரின் பணிக்காகவும், கழுகுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 5 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 8,20,000/- மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ராணி, உதவி ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ராஜ்மோகன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோரின் பணியை பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.
மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாயர்புரம் காவல் நிலைய குற்ற வழக்கில் 2000ம் ஆண்டு முதல் தலைமைறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, முதல் நிலை காவலர்கள் கைலேயங்கிரிவாசன் மற்றும் இளையராஜா ஆகியோரின் பணிக்காகவும் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 1995ம் ஆண்டு முதல் தலைமைறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக்ராஜா மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் ரமேஷ்கண்ணன் ஆகியோரின் பணிக்காகவும் பாராட்டிய வெகுமதிகளை வழங்கினார்.
மேலும் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்திய எதிரிகள் 4 பேரை கைது செய்து ஆவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலை முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார் மற்றும் திருமணிராஜன் ஆகியோரை பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.
மேலும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 1,000/- அபராதமும் தண்டனை கிடைக்க துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பன்னீர்செல்வம் மற்றும் காவலர் அருண் சுந்தர் ஆகியோரின் பணியை பாராட்டி வெகுமதியை வழங்கினார்.
அதே போல கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் திருடுபோன இருசக்கர வாகனத்தை சில நிமிடங்களில் போன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகன தணிக்ககை செய்து திருடுபோன இருசக்கர வாகனத்தை மீட்டு குற்றவாளியை கைது செய்து கடம்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் சந்தனகுமார், பொன்னுத்துரை மற்றும் காவலர் காரிராஜா ஆகியோருக்கும் பசுவந்தனை காவல் நிலைய 102 வழக்குகளை கடந்த ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் முடித்தும், 5 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் 19 வழக்குகளின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பசுவந்தனை காவல் நிலைய காவலர் சுடலைமணி என்பவரின் பணிக்காகவும், லோக் அதாலத் நீதிமன்றத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய 78 வழக்குகளை முடித்தும் ரூபாய் 63,050/- அபராத தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்த திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரிமுத்து என்பவரின் பணிக்காகவும் மாவட்ட எஸ்.பி.டாக்டர்.எல்.பாலாஜி சரவணன் பாராட்டுக்களுடன் வெகுமதி வழங்கி கெளரவித்தார்
இந்நிகழ்வின் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment