மேற்படி இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான தம்பான் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மாவட்ட எஸ். பி யிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட எஸ். பி.டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தம்பான் மற்றும் முறப்பநாடு கோவில்பத்து பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்

No comments:
Post a Comment