ஏரல் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் தீடீர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 May 2026

ஏரல் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் தீடீர் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த கன மழையினால் சேதமடைந்த ஏரல் ஆற்றுப் பாலம் ரூ.695 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதை இன்று 9.5.26 மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து, ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று 9.5.26 மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், முக்காணி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 80,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் 20 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad