ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் ரயில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 January 2025

ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் ரயில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது.

ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கம், ரயில்வே வளர்ச்சி குழு  ரயில் மற்றும் பொது மக்கள் சார்பில் ரயில் மறியல் செய்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சி குழு தலைவர் தங்கமணி செயலாளர் அமிர்தராஜ் பொருளாளர் முருகன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், அமமுக ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், 

தனசேகர் தலைமையில் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் சார்பாக அவைத் தலைவர் விஜயகுமார்,  நகர செயலாளர் ராஜலிங்கம் தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் குருசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்தீபன், 

மாவட்ட இணைச் செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன், முனியாண்டி நாடார் வியாபாரிகள் சங்கம் துணைத் தலைவர் பால்வண்ணன் தங்ககுமார் ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் கனகராஜ் துணை தலைவர் பிரகாஷ் மற்றும் ஏராளமான வியாபாரிகளும் பொது மக்களுமாக 110 பேர் கலந்து கொண்டனர் 55 பேர் கைதானார்கள்‌. கைதானவர்கள் அனைவரும் ஆறுமுகநேரி எஸ் பி திருமண மகாலில் சிறை படுத்த பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad