இதில் பெரும்பான்மையாக 17க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த தடகள போட்டியில் ஒட்டுமொத்த முதன்மை பெண்கள் பிரிவில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் மாணவிகள் மூன்றாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விவேகா 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம், மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம் மற்றும் 4x400 மீட்டர் தொடர் ஒட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். ஜெல்சியால் ஜெனிபர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். குணசுந்தரி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம், 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம். யுவராணி 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம்.
ஸ்வேதா 110 மீட்டர் தடை தாங்கும் போட்டியில் வெண்கல பதக்கம். மார்ட்டின் பிரிஸ்கா குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் .
ஆண்கள் பிரிவில் - வல்தி சிவராம் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம். ஜாபர்சன் உயரம் தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம். அல்ட்ரின் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் வெற்றி பதக்கத்தையும், சான்றிதழ்களையும் வழங்கி மாணவ மாணவிகளையும்
பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஜோஸ் சுந்தர், லீதியாள் ஆகியோரை கல்லூரியின் தாளாளர் ஜெயக்குமார் ரூபன் கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி நிர்வாக அதிகாரி வினோதா, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment