செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா ஆலோசனையின்பேரில் நகர கழகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளா் கணேசன் தலைமைதாங்கினார்.
நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகரத்துணைச்செயலாளா் பூசைராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனா். நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளா் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள் மலா் துாவி மரியாதை செய்யதனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளா் ஜாகீர்உசேன் நகர்மன்ற உறுப்பினா் முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் கனியத்தா, திலகர் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment