ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 December 2024

ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை


ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை மேற்கொள்ளுதல் - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல். விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் ரூ.50/-மட்டுமே.

ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ஆம் வகுப்பு/பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உடன் சேர்க்கையினை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக கீழ்க்காணும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
99525 56469, 94882 01582, 94990 55813, 94990 55812 

மேலும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித்தொகை .ரூ.750/- , மற்றும் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad