திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை - காவல் உதவி மைய காவல்துறை சார்பாக QR CODE அறிமுகம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 November 2024

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை - காவல் உதவி மைய காவல்துறை சார்பாக QR CODE அறிமுகம்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்ப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக QR CODE அறிமுகம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் க்யூ ஆர் கோடு (QR CODE) மற்றும் லிங்க் (Link) மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

*Link👇*

https://bit.ly/E-Support-Hub_Skanda-Sashti-2024
மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அவசர நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad