தூத்துக்குடி விமான நிலையத்தில் வாகனங்கள் நுழைவு கட்டணம் நிறுத்தம் - எம்பவர் இந்தியா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 November 2024

தூத்துக்குடி விமான நிலையத்தில் வாகனங்கள் நுழைவு கட்டணம் நிறுத்தம் - எம்பவர் இந்தியா.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வாகனங்கள் நுழைவு கட்டணம் நிறுத்தம் - எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஆ.சங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "எம்பவர் இந்தியா தலையீட்டின் காரணமாக தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் வாகனங்கள் குறைந்ததற்கான நுழைவுக் கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

10.11.2024 அன்று, நான் தூத்துக்குடி விமான நிலையம் வழியாக டெல்லிக்கு பயணித்தேன். நான் எனது வாகனம் மூலம் உள்ளே நுழைந்தபோது, விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு ஒப்பந்ததாரர் ஊழியர்கள் ரூ.20/ஐ கேட்டனர். எனது வாகனம் என்னை இறக்கிவிடவே வந்தது என்றும் விமான நிலையத்திற்குள் நிறுத்த வேண்டாம் என்றும் அவர்களிடம் கூறினேன். 

அதன்பிறகு, "நுழைவாயிலில், பயணிகளை இறக்கி விடுவதற்காக ஒப்பந்ததாரர்கள் ரூ.20-ஐ வசூலிக்கிறார்கள். இது ஒரு நியாயமற்ற வர்த்தக நடைமுறை. சர்வதேச விமான நிலையங்களில் கூட இறக்குவதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே அதை நிறுத்துமாறு தூத்துக்குடி விமான நிலைய இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளேன்.

பின்னர் 18.11.2024 அன்று மீண்டும் இந்த பிரச்சினை குறித்து @AAIofficial, @aaituairport மற்றும் @AAIRHQSRக்கு X தளம் மூலம் புகார் அனுப்பியுள்ளேன். அதன் பிறகு, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் அந்த இடத்தை ஆய்வு செய்து, நுழைவு கட்டணத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.

அதன்படி வாகனங்களை இறக்குவதற்கு, நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்த நியாயமற்ற வர்த்தக நடைமுறை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது முதல் 30 நிமிடங்களுக்கு கார்/டெம்போ/மினி பஸ்களுக்கான பார்க்கிங் கட்டணம் ரூ.20 மட்டுமே. அதன் பிறகு 2-3 மணி நேரத்திற்கு, குறைந்தபட்சம் ரூ.55 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad