மேலும் இந்த ஆண்டு மழை காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அதன் சுற்றி உள்ள வெள்ளநீர் வடிகால் கரையோர பகுதியில் இருந்து மலை வெள்ள நீர் ஊருக்குள் செல்லாதவாறு சீரமைக்கும் பராமரிப்பு பணி உடன்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் டிபி. பாலசிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதனை உடன்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் டிபி. பாலசிங் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்த ஆய்வின் போது செம்மறி குளம் ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டா மரிய தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மண்டக பொடியான், நோவா அகஸ்டா மரிய தங்கம், பொன் இசக்கி, சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழர் குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment