செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு வங்கியை பயன்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 18 October 2024

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு வங்கியை பயன்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு.

அக்டோபர் 18, செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் வங்கியை பயன்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. 

இந்த விழிப்புணர்வினை திருவைகுண்டம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கிராமப்புற இளைஞர் மேம்பாட்டு திட்டம் ஆகியோர் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வங்கி செயல்முறை விளக்கத்தை காணொளி காட்சி மூலமாகவும், நேரடி விளக்கமாகவும் எடுத்து கூறினர்.

இதில் ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி செயலிகள் மற்றும் இதர பண பரிமாற்ற செயல்களான கூகுள் பே, போன் பே போன்றவற்றின் ஏற்படும் சாதக பாதகங்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள், கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டு திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad