திருச்செந்தூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 29 October 2024

திருச்செந்தூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை.

திருச்செந்தூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி நகராட்சி ஆணையாளர் கண்மணி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், அந்தோணி ரூபன், கிருஷ்ணவேணி, சோமசுந்தரி மற்றும் திமுக இளைஞரணி மணல்மேடு சுதாகர் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக 
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad