தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள 24 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 October 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள 24 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாகவுள்ள 24 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி இரவுக்காவலர் / மசால்ஜி / தோட்டக்காரர் / துப்புரவாளர் / ஸ்கேவன்ஜர் நிலையில் மொத்தம் காலியாகவுள்ள 24 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் “Out Sourcing” மூலம் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட விவரப்படி காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்கள் “Out Sourcing” மூலம் அளித்திட அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட / அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதிவாய்ந்த முகமையானது (Agency) முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விபரங்களுடன் 25.10.2024-க்கு முன்பாக மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், கவரின் மேல்புறம் “மசால்ஜி / இரவுக்காவலர் Out Sourcing விண்ணப்பம்” என குறிப்பிடப்பட வேண்டும். 25.10.2024-க்கு பின்னர் வரப்பெறும் எவ்வித விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad